சன்னி லியோன் பேனரை கிழித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு : காரணம் என்ன?

banner pondicheery sunnyleone
By Irumporai Jan 01, 2022 07:41 AM GMT
Report

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பழைய துறைமுக வளாகத்தில் பிரசித்திபெற்ற இசைக் குழுவினரின் 3 நாட்கள் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்பதற்காக பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.

இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்ககோரி நேற்று முன்தினம் தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து, பழைய துறைமுகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடிகையின் விளம்பர பேனரை கிழித்தனர். அப்போது போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் தடையை மீறி கும்பலாக கூடி நோய் பரப்பும் வகையில் செயல்பட்டதோடு, பேனரை கிழித்து சேதப்படுத்திபோராட்டத்தில் ஈடுபட்டதாக வழுதாவூர் ரமேஷ், முத்தியால்பேட்டை ராஜா, வாணரப்பேட்டை வேளாங்கண்ணி அந்தோணி, லாஸ்பேட்டை மணிமாறன், முதலியார்பேட்டை அழகர், அரியாங்குப்பம் சுந்தரவடிவேல், முருங்கப்பாக்கம் வெங்கடாசலம் மற்றும் 16 பேர் மீது ஒதியஞ் சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.