கோலிக்கு முடிவெடுக்கும் திறமை அறவே கிடையாது - சுனில் கவாஸ்கர் விளாசல்
விராட் கோலிக்கு முடிவெடுக்கும் திறன் அறவே கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்த முடிவால் விராத் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
இந்நிலையில், விராத் கோலியின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. குறிப்பாக சுனில் கவாஸ்கர் விராத் கோலி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2019ல் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது, கோஹ்லி அணியுடன் இருக்கவில்லை, இது அணியின் மீது கோலி எவ்வளவு ஆர்வம், பற்று வைத்துள்ளார் என்பதையும், இந்திய அணியை மனதில் வைத்து அவரது தரப்பில் இருந்து எவ்வாறு முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் காட்டுகிறது" என்றார்.
இதன் மூலம் விராத் முடிவெடுக்கும் திறனை விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்கிறார்.