இத கூட செய்யல...கோடி கோடியா சம்பாதிக்குறீங்க..!! தென்னாப்பிரிக்கா மீது அதிருப்தியில் சுனில் கவாஸ்கர்..!!

Sunil Gavaskar Indian Cricket Team South Africa National Cricket Team South Africa
By Karthick Dec 11, 2023 06:20 AM GMT
Report

நேற்று இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.

இந்தியா அணி tour

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை அடுத்து இந்திய அணி தென்னாபிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

sunil-gavaskar-slams-south-africa-cricket-board

இதில் முதல் டி20 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு டர்பனில் துவங்கவிருந்தது. முன்னதாக, 7 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால், டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. கடைசியில் போட்டி முழுவதுமாக ரத்தானது.

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இது குறித்து கடும் விமர்சனத்தை இந்தியாவின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் மழை பெய்த போது பிட்ச் மற்றும் 30 யார்டு சர்க்கிள் மட்டுமே தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது என்று குறிப்பிட்ட அவர், அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் சங்கங்கள் ஒவ்வொன்றும் மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்றார்.

sunil-gavaskar-slams-south-africa-cricket-board

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது மைதானத்தை முழுமையாக மூடாததன் காரணமாக பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாக புள்ளிகள் இழக்கும் நிலை தான் ஏற்பட்டது என்பதையும் குறிப்பிட்டார். இதில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று தான் என்றுகூறி, இந்தியாவில் கொல்கத்தா மைதானம் மழை பெய்தால் மைதானம் முழுவதுமாக தார்பாய் கொண்டு மூடப்படும் என்பதை தெரிவித்தார்.