ஷாஹீன் அப்ரிடிக்கு காயம் ஏற்படாவிட்டாலும் பாகிஸ்தான் தோற்றுதான் இருக்கும்.. - கவாஸ்கர் கருத்து
நேற்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஷாஹீன் அப்ரிடிக்கு காயம் ஏற்படாவிட்டாலும் பாகிஸ்தான் தோற்றுதான் இருக்கும் என்று வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.
2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து
நேற்று மெல்போர்னில் T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இப்போட்டியின் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
காவஸ்கர் கருத்து
இந்நிலையில் இப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில்,
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி காயம் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருக்கும் என நான் கருதவே இல்லை. ஏனென்றால், அவர்கள் போதுமான ஸ்கோரை அடிக்கவே கிடையாது.
பாகிஸ்தான் 150-155 ரன்களை எடுத்திருந்தால், அவர்களுக்கு ஒரு வேளை வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும்.
வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் வீசாத 10 பந்துகள் அவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். ஒருவேளை ஷாஹீன் பந்துவீசி இருந்தால் பாகிஸ்தானுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்திருக்கும், ஆனாலும், இங்கிலாந்து தான் வெற்றியே பெற்றிருக்கும் என்றார்.