சுமித்ரா மகாஜன் நன்றாக இருக்கிறார்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக
மக்களவையின் முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் நலமாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் குறித்து நேற்று இரவு முதல் தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில் சுமித்ரா மகாஜன் தற்போது நலமாக இருப்பதாகவும் அவரை பற்றிய செய்திகள் வெறும் வதந்தியே என்றும் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், சுமித்ரா மகாஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைவதாக பதிவிட்டு இருந்தார்.
இதற்கு விஜய்வர்கியா பதில் அளித்ததை அடுத்து சசிதரூர் தனது பதிவை நீக்கியுள்ளார்.
அதே சமயம் ,இதுபோன்ற தவறான செய்திகளைக் கண்டுபிடித்து பரப்புவதற்கு மக்களைத் தூண்டுவது எது என்று தெரியவில்லை.
சுமித்ரா மகாஜன் நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
Thanks @kailashOnline. I have deleted my tweet. I wonder what motivates people to invent and spread such evil news that takes in people. My best wishes for Sumitra ji’s health and long life.
— Shashi Tharoor (@ShashiTharoor) April 22, 2021