பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல் - 100 மாணவர்கள் உயிரிழப்பு

Afghanistan Death
By Thahir Sep 30, 2022 11:29 AM GMT
Report

காபூலில் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 100 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

100 மாணவர்கள் உயிரிழப்பு 

ஆப்கானிஸ்தானில் உள்ள மேற்கு காபூலில் இன்று மதியம் காவல் நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர்.மேலும் 27 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் காஜ் உயர்நிலைப்பள்ளியில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 100 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல் - 100 மாணவர்கள் உயிரிழப்பு | Suicide Squad Attacks School 100 Students Killed

மேலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த போது இந்த தற்கொலை படை தாக்குதல் ஆனது நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி நிலையத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.