வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகன்.. யாருக்கும் நடக்க கூடாத கொடூரம்- கதறிய குடும்பம்!

Thoothukudi Crime Murder
By Vidhya Senthil Oct 23, 2024 07:06 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  கடன் தொல்லையால் தாய், மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  கடன் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் -முத்தம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சின்னத்துரை (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் சண்முகம் இறந்து விட, முத்தம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார்.

mother and son suicide

இந்நிலையில், நேற்று முத்தம்மாள் வீடு திறக்கப்படாமல் உள்பக்கமாகப் பூட்டியே கிடந்துள்ளது. இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டைத் திறக்க முயன்றுள்ளனர். ஆனால், வீட்டைத் திறக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து ஸ்ரீ வைகுண்டம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சாலையில் ரத்தமும், சதையுமாக சிதறிய என்ஜினீயரிங் மாணவி- சிறு தவறால் நேர்ந்த கொடூரம்!

சாலையில் ரத்தமும், சதையுமாக சிதறிய என்ஜினீயரிங் மாணவி- சிறு தவறால் நேர்ந்த கொடூரம்!

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாயும், மகனும் சடலமாகக் கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல் துரையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை 

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.காவல் துரையின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

murder

கடன் தொல்லையால் தாய், மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடயே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.