பேத்திக்கு பாலியல் தொல்லை..? - அவமானம் தாங்காமல் முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

By Nandhini May 28, 2022 06:49 AM GMT
Report

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இவர் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2004 - 2005ம் ஆண்டில் அமைச்சராக இவர் பதவி வகித்தார். இவர் ஹல்ட்வானியில் உள்ள தன் வீட்டில் மகன் அஜய் பகுகுணாவுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, இவருடைய மருமகள் கடந்த புதன்கிழமை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் ராஜேந்திர பகுகுணாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால், ராஜேந்திர பகுகுணா அவமானம் தாங்காமல் மனஅழுத்தத்தில் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் மேல் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியின் மீது ஏறி நின்று போலீசாருக்கு போன் செய்து தற்கொலை செய்யப் போவதாக கூறினார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். குடிநீர் தொட்டியின் மீது ஏறி நின்றுக்கொண்டிருந்த ராஜேந்திர பகுகுணாவை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், ராஜேந்திர பகுகுணா, மருமகள் என் மீது பொய்யான புகாரை கொடுத்துவிட்டார் என்று கத்தினார். எனக்கு அவமானமாக உள்ளது. நான் தற்கொலை செய்யப் போகிறேன் கத்தி அழுதார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஒலி பெருக்கி மூலம் அவரை மறுபடியும் சமாதானப்படுத்த முயற்சி செய்து, கீழே வரும்படி அவருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், அவர் யாரும் எதிர்பாராத வகையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மார்பில் சுட்டுக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து மக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மருமகள், அவருடைய தந்தை மற்றும் சிலர் பகுகுணா தாக்கியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் பக்கத்து வீட்டுக்காரர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, போலீசார் மருகள், தந்தை உட்பட 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகள் புகார் கொடுத்ததால் அவமானம் அடைந்த முன்னாள் அமைச்சர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.