தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்வு
Reasons for the Price Hike: தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்துகொண்டே வருகிறது, கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை கடந்த 20ம் தேதி 67 ரூபாய்க்கு விற்பனையானது.
அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவிருப்பதை தொடர்ந்து சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது, நேற்று கிலோ 72 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் E20 பெட்ரோல் தயாரிப்பதற்கு கரும்பை மூலப்பொருளாக கொண்ட எத்தனால் யன்படுத்தப்படுகிறது, இதனால் கரும்பின் தேவை அதிகம் இருப்பதால் சர்க்கரை விலை உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan