பொதுமக்கள் வங்கிக்கணக்கில் திடீரென கொட்டிய காசு மழை, ரூ.1லட்சம் வரை - இன்ப அதிர்ச்சியில் மக்கள்!
பலரது வாங்கி கணக்கில் திடீரென ரூ.1 லட்சம் விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கிக்கணக்கில் பணம்
தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரின் வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் ஆனது. இதுகுறித்து மக்களுக்கு மெசேஜ் வந்தது, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பலர் நேரில் சென்று தங்களது வாங்கி கணக்கை சரிப்பார்த்தனர்.
எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. மேலும், பொதுமக்கள் தங்கள் வாங்கி கணக்கில் யார் டெபாசிட் செய்தது என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
அதிர்ச்சியில் பொது மக்கள்
இந்நிலையில், ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர்.
இந்த தகவல் மாநிலம் முழுவதும் பரவியது, இதனால் மேலும், சில மக்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கணக்கை சரிபார்த்தனர். இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.