வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து - அலறி அடித்து ஓடிய பயணிகள்

Maharashtra Indian Railways
By Thahir Jul 17, 2023 07:05 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து 

இன்று காலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குர்வாய் கெத்தோரா நிலையத்தில் போபாலில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Sudden fire accident in Vande Bharat train

தீ பிடித்த ரயிலின் சி-14 பெட்டியில் 36 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்டதை அறிந்ததும் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீ அணைப்பு 

இதன்பின், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வந்தே பாரத் ரயிலின் சி-14 பெட்டியின் பேட்டரியில் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரயில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும். இதனை ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.