பிரியங்கா வாழ்க்கையையே நாசம் செய்து விட்டார் - மணிமேகலைக்கு ஆதரவாக இறங்கிய சுசித்ரா

Priyanka Deshpande Star Vijay Cooku with Comali Suchitra Manimegalai
By Karthikraja Sep 15, 2024 02:26 PM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

 பிரியங்கா என் தம்பி மகனின் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என சுசித்ரா பேசியுள்ளார்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. 4 சீசன் முடிந்துள்ள நிலையில் 5 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 

cwc manimegalai about priyanka

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் என்ன பிரச்சனை என்பது குறித்து வீடியோவாக தன்னுடைய youtube சேனலில் வெளியிட்டிருந்தார். 

அந்த லேடி ஆங்கர்தான் பிரச்னை; நான் வேலை தெரிஞ்சவ.. மணிமேகலை வீடியோ வைரல்!

அந்த லேடி ஆங்கர்தான் பிரச்னை; நான் வேலை தெரிஞ்சவ.. மணிமேகலை வீடியோ வைரல்!

மணிமேகலை

அதில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் குக்காக வந்த ஒரு தொகுப்பாளர் என்னுடைய வேலையை பார்க்க விடாமல் தடுக்கிறார். அவர்தான் எல்லா இடத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று டாமினேட் செய்கிறார். அவரைப் பற்றி சேனல் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அந்த தொகுப்பாளரிடம் நான் நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டால் இன்னும் சில நிகழ்ச்சிகள் இதே சேனலில் உங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் எந்த தப்பும் செய்யாமல் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கு சுய கௌரவம் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மணிமேகலை வெளியேற பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாடகி சுசித்ரா, பிரியங்காவை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சுசித்ரா

இதில் பேசிய அவர், "நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி பேசவில்லை. மணிமேகலைக்கு நடந்த அநியாயங்கள் பற்றி தான் பேசப்போகிறேன். மணிமேகலை தைரியமாக முடிவெடுத்து இருக்கிறார். தனக்கு எதிராக ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஒரு பெண் அதாவது பிரியங்கா செய்யும் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். 

பிரியங்கா யார் என்று எனக்கு நல்லாவே தெரியும். பிரியங்கா என்னுடைய தம்பி மகனைதான் திருமணம் செய்து இருந்தார். அந்தப் பையனுடைய வாழ்க்கையே பிரியங்காவால் சீரழிந்து விட்டது. ஒரே துறையில் இருப்பதால் இருவரும் காதலித்து திருமணம் செய்தார்கள்.

பிரியங்கா

ஆனால் பிரியங்கா எப்படிப்பட்டவர் என்று எங்களுக்குதான் தெரியும். பொதுவா பிரியங்கா போன்ற சிலர் யாரையாவது எதிர்க்க வேண்டும் என்றால் அவர்களை அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, நண்பன் என்று உறவுமுறை சொல்லி தனக்கு அடிமையாக மாற்றி விடுவார்கள்.

யாராக இருந்தாலும் அவர்கள் தன்னைவிடவும் மேலே போய்விடக்கூடாது என்று ஒரு கேவலமான மனநிலை கொண்டவர்கள். பிரியங்கா அதனால் தான் நிகழ்ச்சியில் எல்லோரையும் என்னுடைய தம்பி, சித்தப்பா பெரியப்பா என்று உறவுமுறை கொண்டாடி கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவராக இருந்தால் கண்டிப்பாக பிரியங்காவின் கேரக்டர் தெரிந்து இருக்கும்" என பேசியியுள்ளார்.