150 நடிகைகளுக்கு தொல்லை; அம்மா நடிகைகளை கூட விட்டு வைக்கவில்லை - தனுஷை விளாசும் சுசித்ரா
தனுஷ் எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார் என சுசித்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நயன்தாரா அறிக்கை
நயன்தார - விக்னேஷ் சிவன் தொடர்பான 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற ஆவண திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நாளை (18.11.2024) வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் உள்ள 3 வினாடி காட்சிகளை பயன்படுத்த அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுசித்ரா
நயன்தாராவின் அறிக்கை சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவிற்கு ஆதரவாகவும், தனுஷிற்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவின் பதிவிற்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்துள்ளனர்.
இந்நிலையில் நயன்தாராவின் அறிக்கை தொடர்பாக பாடகி சுசித்ரா தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "தனுஷ் நயன்தாராவிற்கு இந்த தொல்லை மட்டும் கொடுக்கவில்லை. யாரடி நீ மோகினி படப்பிடிப்பின் போதும் தொல்லை கொடுத்துள்ளார்.
தனுஷ் தொல்லை
நயன்தாரா பதிவை லைக் செய்த நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனுப்பமா போன்ற நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றால் தனுஷிற்கு சலாம் போட வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு சலுகையாக கட் ஆகும். மோசமான கேரவன்கள் வழங்கப்படும்.
தனுஷ் 50 படங்களில் நடித்துள்ளார். அப்படியானால் ஒரு படத்திற்கு 3 நடிகைகள் வீதம் மொத்தம் 150 நடிகைகளுக்கு தனுஷ் தொல்லை கொடுத்துள்ளார். அம்மா பாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கு கூட தொல்லை கொடுத்துள்ள்ளார். சிலருக்கு பாலியல் ரீதியான தொல்லை, சிலருக்கு தொழில் ரீதியான தொல்லை, சிலருக்கு பர்ஷ்னல் ரீதியாகவும் தொல்லை கொடுத்திருப்பார்.
சில நடிகைகளின் இமேஜினை டேமேஜ் செய்யும்படி நடந்து கொள்வார். அவர் ஒரு சைக்கோ என்பதால் எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார்" என கூறியுள்ளார். சுசித்ரா பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சுசித்ரா தனுஷ் மீதான வன்மத்தில் பேசுகிறார் என அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
