ராஜபக்ஷ காலடியில் சுப்பிரமணியன் சுவாமி : நடந்தது என்ன?

srilanka mahindarajapaksa subramanianswami
By Irumporai Oct 13, 2021 05:04 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.  

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி நேற்று இலங்கை சென்றார்.

அங்கு அவருக்கு அந்நாட்டு அமைச்சர்கள்  சார்பாக விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்,  இன்றுமாலை நடைபெற்ற நவராத்திரி விழாவிலும் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,:

“நீண்டகால நண்பர் மற்றும் சகாக்களுடன் நவராத்திரி கொண்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நவராத்திரியாக அமைய வாழ்த்துக்கள். கடவுளின் ஆசிர்வாதங்களுடன் நாம் பயணிக்கும் பாதையில் வெற்றி ஒளிர வேண்டும்எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், சுப்ரமணியன் சுவாமி நாளை நடைபெறும் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.