புதுசா ஏதாவது யோசிங்க அமித் ஷா; இந்தி வெறியர்களின் 75 ஆண்டுகால வசனம் அது - சு.வெங்கடேசன் தாக்கு
ஆங்கிலம் குறித்த அமித் ஷா கருத்திற்கு சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
அமித் ஷா பேச்சு
டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அமித் ஷா பேசுகையில், இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கி தலை குனிவார்கள். அப்படியொரு சமூகம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அவர்கள்தான் நாட்டில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். இந்தியாவில் உள்ள மொழிகள் தான் நம் கலாச்சாரத்திற்கு ஆபரணங்களை போன்றது. மொழிகள் இல்லாமல் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது.
சு.வெங்கடேசன் பதிலடி
ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியில் நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அரைகுறைவான வெளிநாட்டு மொழியால் நாம் ஒருபோதும் முழுமையான இந்தியா என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று பேசியிருந்தார்.
இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி இந்தியை திணிக்க பார்ப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு அவ்விடத்தில் இந்தியை உட்கார வைக்க கடந்த
75 ஆண்டுகளாக இந்தி வெறியர்கள் எத்தனையோ வசனங்களைப் பேசிப் பார்த்துவிட்டனர். அதில் அரதப் பழசான வசனம்தான் இன்று அமித்ஷா பேசியுள்ளது. புதுசா ஏதாவது யோசிங்க சார்! என்று பதிவிட்டுள்ளார்.