அரசு கல்லுாரியில் ஹிஜாப்புக்கு அனுமதி மறுப்பு வகுப்புகளை புறக்கணித்த மாணவிகள்..!
கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து இந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கர்நாடக அரசு பள்ளி,கல்லுாரியில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர்.
இதையடுத்து சில நாட்கள் கழித்து ஹிஜாப் விவகாரம் போய் இந்து கோவில்களில் வியாபாரம், ஹலால் விவகாரம் எழுந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.
அவர்களை, பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. ஹிஜாப் அணிந்து வந்ததை கண்டித்து ஏ.பி.வி.பி. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.