பள்ளி திறப்புக்கு பின் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் - அமைச்சர் மா.சு..!

Chennai
By Thahir Jun 04, 2022 04:10 AM GMT
Report

பள்ளி திறந்த பின் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்த வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பள்ளி திறப்புக்கு பின் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் - அமைச்சர் மா.சு..! | Students Must Wear A Face Mask Minister

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் தொடர்ந்து அணிவது நல்லது. விரைவில் இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்.