மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கு - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு

Kallakurichi School Death Kallakurichi
By Thahir Aug 23, 2022 05:12 PM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது 

மாணவியின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை ஒரு நாள் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரித்தனர் சிபிசிஐடி போலீசார்.

9 மணி நேர விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி தாளாளர் 5 பேரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மனுதாக்கல் செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கு - பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு | Student Srimathi Death Case

இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் 4-வது முறையாக 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமில்லை என மனுவில் தெரிவித்துள்ளனர்.