பழனியில் பரபரப்பு - 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

Student sexual harassment teacher arrested
By Nandhini Nov 27, 2021 06:52 AM GMT
Report

பழனி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நட்ராயன் (30) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் இதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதை அறிந்த மாணவியின் தாயார், பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் நட்ராயனை போக்சோ சட்டத்தின் கீழ் செய்தனர். பிறகு, இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீப காலமாக பாலியல் குற்றங்களில் ஆசிரியர்கள் பலர் சிக்கி வருகிறார்கள். இது தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கு முன்பு கோவை, கரூர் மாவட்டங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த அதிர்ச்சி இன்னும் மீளவில்லை. இதிலிருந்து மீள்வதற்குள் பல பகுதிகளிலிருந்து ஆசிரியர்களின் பாலியல் குற்றங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற குற்றங்கள் பெற்றோர்களிடையேயும், மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.   

பழனியில் பரபரப்பு - 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது | Student Sexual Harassment Teacher Arrested