ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி வாயில் திரவத்தை ஊற்றி 5 மாணவர்கள் - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

student sexual-harassment கைது மாணவி பாலியல்வன்கொடுமை 5-boys-arrest 5மாணவர்கள்
By Nandhini Apr 10, 2022 06:18 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலம், ஹலினாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவியுடன் படித்துவந்த சக மாணவர்கள் 5 பேர் அந்த மாணவியை சுற்றி சுற்றி வந்துள்ளனர்.

ஒரே வகுப்பு மாணவர்கள்தானே என்று அந்த மாணவியையும் இவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அந்த 5 மாணவர்கள், மாணவியிடம் சென்று எங்களுக்கு உன் மேல் ஆசை இருக்கு. ஆதலால் எங்களின் ஆசைக்கு இணங்குமாறு சொல்லி அழைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மறுத்துள்ளார். பல முறை இவர்கள் அழைத்தும் அந்த மாணவி இணங்க மறுத்ததால், அந்த மாணவி மேல் இந்த 5 மாணவர்கள் கோபமடைந்தனர். இதனால், மாணவி போகும்போதும், வரும்போதும் கிண்டல் கேலி செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கெட்ட கெட்ட வார்த்தியால் திட்டியும் உள்ளனர்.

இந்நிலையில், பள்ளி முடிந்து மாலை அந்த மாணவி வீட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கும்போது, அந்த 5 மாணவர்களும் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, அந்த மாணவியை 4 பேர் பிடித்துக் கொள்ள, ஒரு மாணவன் வலுக்கட்டாயமாக மாணவியின் வாயில் ஒரு திரவத்தை ஊற்றியுள்ளான்.

மாணவி அவர்கள் பிடியிலிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளாள். வீட்டில் சென்றவுடன் மாணவிக்கு ஒரே வாந்தி, மயக்கம் வந்தது. பதறிப்போன பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் 5 மாணவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி வாயில் திரவத்தை ஊற்றி 5 மாணவர்கள் - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம் | Student Sexual Harassment 5 Boys Arrest