ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட மாணவி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!
Chennai
Crime
Death
School Children
By Vidhya Senthil
ஈரக் கையால் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை
சென்னை எண்ணூரில் ஈரக் கையோடு மொபைல்போனுக்கு சார்ஜ் போட முற்பட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் 9-ம் வகுப்பு மாணவி அனிதா (14) பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக மின்சாரம் தாக்கியதில் அவர் மயங்கி கீழே சரிந்த நிலையில், அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்தசம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.