கள்ளக்குறிச்சி கலவரம் : மாணவி பயின்ற பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை

Kallakurichi School Death Kallakurichi
By Irumporai Jul 18, 2022 08:48 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்.

கலவரமான பள்ளி

பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

thanthi

இதைத் தொடர்ந்து மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆய்வில் அதிகாரிகள்

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வன்முறையால் பள்ளியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.