நெற்றியில் பொட்டு வைத்து சென்ற மாணவியை அடித்த ஆசிரியர் - மாணவி தற்கொலை..!
பள்ளிக்கு நெற்றியில் பொட்டு வைத்து சென்ற மாணவியை ஆசிரியர் அடித்ததால் மணமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்கு மாணவி ஒருவர் நெற்றியில் பொட்டு வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்த ஆசிரியர் மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்களின் புகாரை தொடர்ந்து ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை குழந்தைகள் பாதுகாப்பு உரிமைக்கான தேசிய ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளது.
குழு அமைப்பு
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உரிமைக்கான தேசிய ஆணைய தலைவர் பிரியங் கனுாங்கோ பேசுகையில், இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய சம்பவம். அந்த பள்ளி சிபிஎஸ்சிக்கான அங்கீகாரம் பெறவில்லை.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளேன். நான் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை சந்திக்க இருக்கிறேன்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த எங்கள் குழு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.