தேர்வு முடிந்து வீடு திரும்பிய மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு...கதறி அழுத ஆசிரியர்கள்

death teachers student 12th practical
By Praveen Apr 20, 2021 05:15 PM GMT
Report

 பழனி அருகே கீரனூர் ஆற்றுப் பாலத்தில் செய்முறை தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்பிய பணிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் பலி மற்ற இருவர் பலத்த காயம் சிகிச்சைக்காக பழனி மருத்துவமனையில் அனுமதி.

பழனி அருகே கீரனூர் ஆற்றுப் பாலத்தில் விபத்து ஒரு மாணவன் பலி மற்ற இரண்டு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பழனி அருகே கொக்கரக்கோ வலசு பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சதீஷ் ரமேஷ் லோகேஷ் ஆகிய 3 பேரும் கீரனூர் அரசு பள்ளியில் செய்முறை தேர்வை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கீரனூர் ஆற்றுப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது ஆம்னி வேன் மோதியதில் சதீஷ் என்ற பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி. லோகேஷ் என்ற பள்ளி மாணவனுக்கு பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மற்றொரு மாணவன் ரமேஷ் முகத்தில் காயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி. மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியர்கள் இறந்த மாணவனை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கண்களை கலங்க செய்தது.

மேலும் விபத்து குறித்து கீரனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.