கேபிள் கார் தடம் புரண்டு கோர விபத்து - 15 பேர் பலி; 18 பேர் காயம்!
கேபிள் கார் தடம் புரண்ட விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
கேபிள் கார் விபத்து
போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயில் அந்நாட்டின் வரலாற்று சின்னம்.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 பேர் பலி
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ச்சுகல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.