வளர்ப்பு மகளுடன் திருமணம்; தந்தையுடன் விரிசல் - ஆறாத ரணங்கள், எலான் மஸ்க்கின் மறுபக்கம்!
எலான் மஸ்கின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்
வால்டர் ஐசக்சன் என்பவர் எழுதிய எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியாகியுள்ளது. அதில் பல தகவல்கள் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் இருந்த சமயத்தில் பள்ளியில் படிக்கும் போது சக மாணவர்களிடம் இருந்து பல கொடுமைகளை சந்தித்துள்ளார். வகுப்பில் பிற மாணவர்களுடன் வயது குறைவாக இருந்துள்ளதோடு உயரமும் குறைவாகவும் இருந்துள்ளார்.
மறுபக்கம்..
இதற்காகவே மாணவர்கள் சேர்ந்து இவரை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் சக மாணவர்கள் கடுமையாக தாக்கியதில், முகத்திலும் மூக்கிலும் மோசமான காயம் ஏற்பட்டு மருத்துவமணையில் எலான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது முகத்தை குணப்படுத்தவே பல ஆண்டுகள் ஆனது. தந்தை எரோல், தனது வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். அன்றிலிருந்து எலானும் அவருடைய தம்பி கிம்பலும் தந்தையிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். எலான் மஸ்க்கிற்கு ஆறு வயது.
ஒருநாள் எதிர்பாராவிதமாக அவரது நாய், அவரை தாக்கி பின்புறத்தை கடித்து சிதைத்துவிட்டது. நாயின் மீது கோபமே கொள்ளவில்லை, இதற்காக அதை தண்டித்துவிடாதீர்கள் என்றே குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்களோ அதை துப்பாக்கியால் சுட்டு அன்றே கொன்றுவிட்டனர். இவ்வாறு அவர் சந்தித்த பல ரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.