இஸ்ரேல் – காசா போரை நிறுத்துங்கள் – கவிஞர் வைரமுத்து உருக்கமான பதிவு..!
இஸ்ரேல் – காசா போரை நிறுத்துங்கள் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளாா்.
இஸ்ரேல் – காசா இடையே போர்
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.
இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த போரில் சுமார் 3000 மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
கவிஞர் வைரமுத்து கவலை
போர் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்
கவலை சூழ்கிறது நள்ளிரவில் தூக்கம் அழிகிறது இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளிலும் போரைத் தொடுத்தவர்களைவிட சம்பந்தமில்லாதவர்களே சாகிறார்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் நியாயங்களை; போரை நிறுத்துங்கள் முதலில் கருகும் தேசங்களில் ஒலிவம்பூக்கள் பூக்கட்டும் யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கவலை சூழ்கிறது
— வைரமுத்து (@Vairamuthu) October 11, 2023
நள்ளிரவில்
தூக்கம் அழிகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம்
இரு நாடுகளிலும்
போரைத் தொடுத்தவர்களைவிட
சம்பந்தமில்லாதவர்களே
சாகிறார்கள்
பிறகு பேசிக்கொள்ளலாம்
நியாயங்களை;
போரை நிறுத்துங்கள்
முதலில்
கருகும் தேசங்களில்
ஒலிவம்பூக்கள் பூக்கட்டும்
யுத்த களத்தில்
நம் தமிழ்ப் பாடல்… pic.twitter.com/bkHJkE60nw