திமுகவிற்கு யார் போட்டி என்பதில் தான் போட்டியே!! - அமைச்சர் உதயநிதி பளிச்..!!
தமிழகத்தில் திமுகவிற்கு யார் போட்டி என்பதில் தான் மற்ற கட்சிகளுக்கே போட்டி என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக கிட்ட தான் கேக்கணும்..?
நேற்று கட்சி கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி என போட்டி என கூறினார். அவரின் அந்த கருத்து பெரும் பரவலாகி பேசப்பட்டு வரும் நிலையில், அது குறித்து திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது குறித்து இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அது பற்றி அதிமுகவின் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும் என கூறி, யாராக இருந்தாலும் திமுகவிற்கு ஒன்றுதான் என்றார்.
இது திசை திருப்பும்
வேலை கட்சி தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலை எதிர்கொள்வோம் என தெரிவித்து தி.மு.க-வுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடக்கிறது என்று கூறினார்.மேலும், சனாதன விவகாரம் குறித்துப் பேசுகையில், இது திசைதிருப்பும் முயற்சி என விமர்சித்த உதயநிதி, சி.ஏ.ஜி அறிக்கை, மணிப்பூர் குறித்துப் பேசுவோம் என கூறினார்.
தொடர்ந்து சனாதனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,அது பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன் என் கூறி பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் ஆகியோர் பேசியதைவிட, தான் அதிகமாகப் பேசவில்லை" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.