வரும் தேர்தலில் வேட்பாளர் தோற்றால்....மா.செ'க்களை எச்சரித்த ஸ்டாலின்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்கள் தோற்றால் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்புகளை கொண்டுள்ளது. மத்திய பாஜக அரசின் முக்கிய தேர்தலாக பார்க்கப்படும் இது காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றேயாகும்.
அதே நேரத்தில் மாநிலத்தில் தங்களது பலத்தை நிரூபித்து காட்டிக்கொள்ள மாநில கட்சிகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் இந்த தேர்தலை மிகவும் தீவிரமாக கையாண்டு வருகின்றது.
எச்சரித்த முதல்வர்
முக ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை பிடித்திருந்த திமுக, இம்முறையும் அதனை மீண்டும் திருப்பி செய்து நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் போக்கில் தற்போதிலிருந்தே பணிகளை துவங்கி விட்டனர்.
பிரச்சாரங்கள், கட்சி வேலைகள் என பலவற்றிலும் மும்முரம் காட்டி வரும் சூழலில், தற்போது திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வரும் நாடளுமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால், அந்த மாவட்டத்தின் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என அதிரடியாக எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்துள்ளார். மேலும், தேர்தல் பணிகளின் போது சரியாக தொகுதி பார்வையாளர்களுக்கு ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்களும் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.