‘‘வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு ஸ்டாலின் அரசு’’- அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்!
ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் மனிதாபிமானமிக்க அரசாக திகழ்வதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் அமைந்துள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரானா கால நிவாரண நீதியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் மனிதாபி மிக்க அரசாக ஸ்டாலின் தலைமையிலான அரசு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், மக்களின் துயரை துடைக்க கொரானா நோயினை கட்டுப்படுத்த அனைத்து கட்சியினரையும் அழைத்து பேசும் முதிர்ச்சி பெற்ற எடுத்துக்காட்டு முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார்.
மேலும் ,வாக்குறுதியின் படி கொரானா பாதிப்பிற்குத்தான் நிவாரண நிதி வழங்கபடுவதாக அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.