மாணவர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் - சுதந்திர தினத்தில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்!
நேற்று சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் உரை
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை கோட்டையில் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையற்றினார். அப்போது பேசிய அவர், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
அடுத்தடுத்து அறிவிப்புகள்
அதில் முதலாவதாக, விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 1லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், மேலும் இந்த மானியம் வழங்கும் திட்டம் மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். வரும் கல்வி ஆண்டில், தமிழ்நாட்டிலுள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.
மேலும், நடப்பாண்டில் பல்வேறு துறைகளை சேர்ந்த 55 ஆயிர அரசு பணியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
சேவை நல வாரியம்
மேலும், Swiggy, Ola, Zomato போன்ற சர்வீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கு என விரைவுச் சேவை நல வாரியம் அமைக்கப்படுகிறது. அவர்கள் வாழ்க்கை மற்றும் பணிகள் முக்கியமானது. அவர்களை காக்கும் விதமாக இந்த நல வாரியம் அமைக்கப்படும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ராணுவத்தில் இருந்து திரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.