ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

medicine stalin oxygen bed remdesivir
By Praveen May 08, 2021 12:28 PM GMT
Report

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால் அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பதற்கான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன்பிலிருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.