கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க -ஸ்டாலின் கடிதம்

fishermen stalin qatar
By Irumporai May 25, 2021 05:35 PM GMT
Report

கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 24 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் : கடந்த மார்ச் 25ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து 20 மீனவர்களையும், கேரளத்தின் 4 மீனவர்களையும் உள்ளிடக்கிய படகு கத்தார் நாட்டு கடல் எல்லையில் சிறைபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டது.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் அவர்களின் நிலையறியாது அவர்களது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர் ஆகவே தமிழகத்தை சேர்ந்த 24 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.