சேலத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விரைந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும் படுக்கைகளை உருவாக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக சேலத்தில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைதது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.
மேலும் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் சேலத்தைத் தொடர்ந்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார்.
சேலத்தில் #COVID19 சிகிச்சை முன்னெடுப்புகளை ஆய்வு செய்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 20, 2021
அரசு மருத்துவமனைகளில் 1583, தனியார் மருத்துவமனைகளில் 2896 படுக்கைகள் உயிர்வளி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட புதிய மையத்தைத் திறந்து வைத்தேன். மேலும் 500 படுக்கைகள் அமைக்கப்படும். pic.twitter.com/lCgexzqpLE