எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

DMK Stalin Perarivalan Ezhuvar
By mohanelango May 11, 2021 12:48 PM GMT
Report

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அதிகாரிகளுடன் எழு தமிழர் விடுதலை தொடர்பாக அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை ஆளுநர் நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு பின்னர் நிராகரித்தார்.

திமுக 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ஏழு தமிழர் விடுதலையை உறுதி செய்வோம் எனத் தெரிவித்திருந்தது.

எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை | Stalin Discuss Ezhuvar Release With Ministers

திமுக வென்று ஆட்சி அமைத்துவிட்ட நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் தன்னுடைய இல்லத்தில் எழுவர் விடுதலை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.