1000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்...இபிஎஸ் குற்றச்சாட்டு...!!
மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது.
மகளிர் உரிமைத் தொகை
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை துவங்கி வைத்தார். தமிழகத்தில் மொத்தமாக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மொத்தம் 1 கோடியே 6 லட்ச மகளிருக்கு இந்த உரிமை தொகை திட்டம் இனி மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கு பல விதமான எதிர்ப்புகளும், குறைகளும் கூறி வரும் நிலையில், தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளங்கை நெல்லிக்கனி
அந்த அறிக்கையில், தமிழகத்தில் பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் உரிமை தொகை வழங்குவது ஏமாற்று வேலை என குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் பாதி தாய்மார்களுக்கு மேல் பட்டை நாமம் போட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது என விமர்சித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 உரிமை தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காரணத்தால் மகளிர் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைப்பதாக குற்றம்சாட்டி இருக்கின்றார்.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
