சாலையில் விழுந்த இளைஞர் , களத்தில் இறங்கிய முதலமைச்சர் : ஆச்சரியப்பட்ட அதிகாரிகள்
தலைமைச் செயலகத்தில் இருந்து தனது இல்லம் திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் விபத்தில் சிக்கி துடித்துக் கொண்டிருந்த ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார்.
விபத்தில் சிக்கிய இளைஞர்
மதுரை மருத்துவக் கல்லூரியில் புது நூலகம் மற்றும் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதன் பிறகு அமைச்சர் பொன்முடியை தனது காரில் ஏற்றிக்கொண்டு கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அண்ணா சாலையில் உள்ள ஏஜி டி.எம்.எஸ். என்ற இடத்தின் அருகே முதல்வர் வந்து கொண்டிருந்த போது, சாலையின் இடதுபுறம் டூவிலரில் சென்ற இளைஞர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்.
களத்தில் இறங்கிய முதலமைச்சர்
இதனைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தனது காரை நிறுத்தச் சொல்லி விறுவிறுவென இறங்கிச் சென்று கீழே விழுந்த நபருக்கு தனது காவலர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காயங்களுக்கு மருந்து போடுமாறு அங்கிருந்த போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுறுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த மனிதாபிமானமிக்க செய்ய அவருக்கு பாராட்டை பெற்றுள்ளது.
இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிய நபர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த அருள் ராஜ் என்பதும் அவர் பணி நிமித்தமாக சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.