10,11,12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தேதி மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு
10,11,12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
செய்முறை தேர்வு தேதி மாற்றம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வுகளுக்கும், செய்முறை தேர்வுகளுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே தேதி மாற்றி அமைக்கப்படுகிறது.
திட்டமிட்டபடி பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.