Thursday, Apr 10, 2025

எஸ்.ஆர்.எம் தமிழ்பேராயம் நடத்தும் சொல் தமிழா சொல் பரிசளிப்பு விழா - சிறப்பு விருந்தினர்களாக சீமான், அண்ணாமலை

Chennai K. Annamalai Seeman
By Karthikraja 6 days ago
Report

எஸ்.ஆர்.எம் தமிழ்பேராயம் நடத்தும் சொல் தமிழா சொல் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா சென்னையில் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

சொல் தமிழா சொல் இறுதிச்சுற்று

எஸ்.ஆர்.எம் தமிழ்பேராயம் சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பேச்சுத் திறனை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், 9 மண்டலங்களில் மாபெரும் பேச்சுப்போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 

தமிழ்ப்பேராயம் சொல் தமிழா சொல்

மாநில அளவிலான இறுதிப்போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் 06.04.25 ஞாயிற்றுக் கிழமையிலும், இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா 07.04.25 திங்கட்கிழமை காலையிலும் நடைபெற உள்ளது. 

எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம்

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும். தமிழ்ப்பேராயத்தின் புரவலருமான டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெறும் அவ்விழாவில் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அரசியல் ஆளுமைகள் சிறப்புரை ஆற்றுவார்கள். 

srm chancellor TR paariventhar

ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், SRMIST வளாக நிர்​வாகி இரா.அருணாச்​சலம் வரவேற்​புரை​யாற்​றுகிறார். அதைத்தொடர்ந்து, தமிழ்ப் பேரா​யத்​தின் தலைவர் முனை​வர் கரு.​நாக​ராசன் அறி​முக உரை​யாற்​றுகிறார்​. பேராசிரியரும், பட்​டிமன்​றப் பேச்சாள​ரு​மான கு.ஞானசம்பந்தன் அவர்கள் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துரை வழங்குவார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். 

மாநில அளவில் வெற்றி பெறு​பவருக்கு முதல் பரி​சாக ரூ.5 லட்​சம், 2-ம் பரி​சாக ரூ.3 லட்​சம், 3-ம் பரி​சாக ரூ.2 லட்​சம் வழங்​கப்​படு​கிறது. மொத்​தம் ரூ.40 லட்​சம் பரிசுத் தொகை​யாக வழங்​கப்பட உள்​ளது.