கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் : ராமானுஜ ஜீயர் !

Ramanuja Jeeyar Tamil Nadu Government
By Irumporai Aug 22, 2021 12:17 AM GMT
Report

 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கு எங்களின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும்.

கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் : ராமானுஜ ஜீயர் ! | Srivilliputhur Sadagopa Ramanuja Jeeyar Tn Gvt

நடைமுறைகளை மாற்றக்கூடாது. பாரம்பரிய முறைகளை மாற்றுவது தமிழக அரசிற்கு நல்லது கிடையாது. இந்த ஆணையை தமிழக அரசு நீக்க வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போடுவார் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்