இலங்கை எழுத்தாளர் செ கணேசலிங்கன் காலமானார்

By Fathima Dec 04, 2021 12:42 PM GMT
Report

சென்னையில் வசித்து வந்த பிரபல இலங்கை எழுத்தாளர் செ கணேசலிங்கன் இன்று காலமானார்.

40க்கும் மேற்பட்ட நாவல்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர் செ கணேசலிங்கன்.

கடந்த 1965ம் ஆண்டு இவர் எழுதிய நீண்ட பயணம் என்ற புதினம், இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசினை பெற்றது.

இவர் 1971 ஆம் ஆண்டு ’குமரன்’ என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து அதில் பொதுவுடமை கருத்துகள் அடங்கிய படைப்புகளையும் வெளியிட்டு வந்தார்.

சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த கணேசலிங்கன் இன்று காலை உயிரிழந்தார்.