அசால்டாக வெற்றி பெற்ற இலங்கை அணி: தொடரை இழந்த சோகத்தில் இந்தியா
இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருஅணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்க வெற்றியை நிர்ணயிக்கும் 3வது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்திப் யாதவ் 23 ரன்கள் எடுத்தார்.
அதேசமயம் இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு அதனை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்று அசத்தியுள்ளது.