போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கையில் 36 மணி நேரம் ஊரடங்கு அமல்..!
Srilanka
Curfew
Government
Order
ஊரடங்கு
இலங்கை
By Thahir
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன. தினமும் 13 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே போராட்டத்தை ஒடுக்கும் விதமாக இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை 36 மணி நேரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.