இங்கிலாந் போகுமா இலங்கை அணி? சிக்கலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜூன் 23 அன்றும் டி20 தொடர் ஜூன் 29 அன்றும் தொடங்கவுள்ளது இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்காக இலங்கை அணி இரு நாள்களில் புறப்படவுள்ள நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வீரர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
காரணம் என்ன:
சமீபத்தில் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
கிரிக்கெட் வாரிய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநர் டாம் மூடி ஆகியோர் புதிய ஒப்பந்த விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
அதன்படி வீரர்களின் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் 2019 முதல் சிறப்பாக விளையாடியிருந்தால் 50 சதவீதமும்.
உடற்தகுதிக்கு 20 சதவீதமும் தலைமைப்பண்பு, தொழில்முறை, , அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் உள்ளது
. கிரிக்கெட் வாரியத்தின் புதிய முறைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கேப்டன் குசால் பெரேரா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
முன்பு 24 வீரர்கள் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இதன் எண்ணிக்கை 38 வீரர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Sri Lanka’s tour of England thrown into doubt due to escalating board dispute.#SLvENGhttps://t.co/6YkPj0omUg
— Yahoo! Cricket (@YahooCricket) June 6, 2021
அதில்,வீரர்களுக்குப் புள்ளிகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என அறிக்கையில் கூறியுள்ளார்கள்.
இரு நாள்களில் இங்கிலாந்துக்கு இலங்கை வீரர்கள் புறப்பட வேண்டும் என்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.