திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 7 பேர் தற்கொலை முயற்சி- போலீசார் குவிப்பு

Sucide Trichy Sri Lankan Refugees Attempt
By Thahir Aug 18, 2021 10:04 AM GMT
Report

திருச்சி சிறை வளாகத்திலுள்ள முகாமில் உள்ளோரை விடுவிக்கக் கோரி இலங்கை அகதி துாக்கமாத்திரை சாப்பிட்டும் தங்களை கத்தியால் அறுத்துக்கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் தங்களை சிறையில் அடைத்து வைத்துள்ளதாக இலங்கை அகதிகள் 7 பேர் தெரிவித்துள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 7 பேர் தற்கொலை முயற்சி- போலீசார் குவிப்பு | Sri Lankan Refugees Sucide Attempt Trichy

விடுதலை செய்யக்கோரி நீண்ட நாட்களாக போராடி வரும் நிலையில் தற்போது அவர் துாக்கமாத்திரை சாப்பிட்டும்,துாக்கு மாட்டிக்கொண்டும் ,வயிற்றை கிழித்துக் கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

7 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.இதனால் மத்திய சிறை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 7 பேர் தற்கொலை முயற்சி- போலீசார் குவிப்பு | Sri Lankan Refugees Sucide Attempt Trichy