இலங்கை அதிபர் தேர்தல்; ரணில் விக்ரமசிங்கே வாக்களித்தார்

Sri Lanka President of Sri lanka
By Thahir Jul 20, 2022 06:06 AM GMT
Report

இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் ரணில் விக்ரமசிங்கே.

அதிபர் தேர்தல் 

மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்; ரணில் விக்ரமசிங்கே வாக்களித்தார் | Sri Lankan Presidential Election Ranil Voted

இந்த அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.இந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெருமா, அனுரா குமார திசநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கேவிற்கு வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்களித்தார் ரணில்

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். முன்னதாக முதலாவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாக்களித்தார்.

Sri lanka

இரண்டாவதாக ரணில் விக்ரமசிங்கே வாக்களித்தார். அதை தொடர்ந்து தனது வாக்கினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்து வருகின்றனர்.