இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு பெற்றது - வாக்கு எண்ணிக்கை துவங்கியது..!

Sri Lanka President of Sri lanka
By Thahir Jul 20, 2022 06:27 AM GMT
Report

இலங்கை அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இலங்கையில் கடும் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்ததை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நாளடைவில் மோதலாக மாறியது.இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து பிரதமர் மற்றும் அதிபர் தங்கள் பதவியிலிருந்து விலகி அந்நாட்டை விட்டு தப்பிச்சென்றனர்.

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு பெற்றது - வாக்கு எண்ணிக்கை துவங்கியது..! | Sri Lankan Presidential Election Counting Begins

இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோந்தெடுப்பதற்கானத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.

இதையடுத்து இந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றனர்.