அதிபர் மாளிகையில் நுழைந்து போராட்டக்கார்கள் அடித்த லூட்டிகள் - வைரலாகும் புகைப்படத் தொகுப்பு

Sri Lanka Viral Photos
By Nandhini Jul 10, 2022 07:32 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இலங்கை பொருளாதாரம்

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு

கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, இலங்கையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.

இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்

நேற்று கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார்.

வைரலாகும் புகைப்படத் தொகுப்பு

நேற்று போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அங்கிருந்த உணவைகளை சாப்பிட்டனர். சிலரோ, ஷோபாவில் அயர்ந்து தூங்கினர். அதிபர் மாளிகையில் இருந்த நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து குளியல் போட்டனர். மேலும் சிலரோ, அங்கிருந்த காய்கறிகளை எடுத்து சமைத்து சாப்பிட்டனர். அங்கிருந்த அதிபர் மாளிகையில் இருந்த பாத்ரூமில் ஒருவர் உற்சாகமாக குளித்து மகிழும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் அடித்த லூட்டிகள்

sri lanka

அதிபர் மாளிகையை தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள் - வைரலாகும் வீடியோ