சிம்பு எனக்கு அண்ணன் மாதிரி... அந்தர் பல்டி அடித்த ஸ்ரீநிதி - ஷக்கான ரசிகர்கள்

Silambarasan
By Nandhini Jul 21, 2022 06:25 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாராடி நீ மோகினி என்ற சீரியல் தொடரில் நடித்து வருகிறார்.

ஸ்ரீநிதி தர்ணா

சமீபத்தில் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என்று இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

சிம்பு வேணும்

மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! அவர் வேணும், அவரை பார்க்கணும், இப்பவே என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பதிவுகள் இணையதளத்தில் அதிகமாக வைரலானது.

Sreenidhi - silambarasan

சிம்பு அண்ணன் மாதிரி

இந்நிலையில், சமீபத்தில் ஷகிலாவுக்கு ஸ்ரீநிதி பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், சிம்பு உன்னை உண்மையில் காதலிக்கிறாரா? என்று ஷகிலா கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்ரீநிதி, சிம்பு என்னை காதலிப்பதாக சொன்னது உண்மை தான். ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் கிடையாது. நான் கொஞ்சம் எமோஷனலாக இருந்தேன். அதனால், சிம்பு என்னை லவ் பண்ணுவதாக நானே கற்பனை செய்து கொண்டேன். அது என்னுடைய கற்பனை தான்.

ஆனால் அதன் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் என்னை பற்றி ஒரு விஷயம் கூட மனம் திறந்து பேசவில்லை என்று யோசித்தேன். அதன்பிறகு, என்னை நான் மாற்றிக்கொண்டேன்.

இதனையடுத்து ஷகிலா, சிம்பு அவளுக்கு அண்ணன் போன்றவர். இனி யாரும் இவரை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.