சுய நினைவை இழந்த நோயாளி; சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டில் - அவலம்!

Bihar
By Sumathi Aug 10, 2023 07:17 AM GMT
Report

நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டில் வைத்து சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுயநினைவு இழப்பு

பீகார், ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நோயாளி ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

சுய நினைவை இழந்த நோயாளி; சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டில் - அவலம்! | Sprite Bottle Instead Of Urine Bag For Patient

அப்போது பரிசோதனை முடிந்து நோயாளிக்கு சிறுநீர் பையை பொருத்தும்படி செவிலியர்களுக்கு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால்

அவல சம்பவம் 

அந்த ஊழியர்கள் சிறுநீர் பைக்கு பதிலாக நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டிலை இணைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை மேலாளரை தொடர்பு கொள்ள முயன்றதில் உரிய பதில் கிடைக்கவில்லை.

அதன்பின், அவருக்கு சிறுநீர் பை உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொறுப்பில் இருந்தவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மருந்து தட்டுப்பாடு குறித்து தெரிவிக்கப்படவில்லை என மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.